×

பாஜ நிர்வாகி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள திம்மராஜபுரத்தை சேர்ந்த பழனி மகன் மருதுபாண்டி(29). பாஜ நிர்வாகி. இவர் பாஜ கட்சியின் சின்னமான தாமரை ஸ்டிக்கரை கடந்த மாதம் 12ம் தேதியன்று அரசு பேருந்தில் ஒட்டினார். இதனை தட்டிக்கேட்ட பேருந்து ஓட்டுனர் சுப்பிரமணியன், நடத்துனர் பாஸ்கர் ஆகியோரை மிரட்டி, சோடா பாட்டிலால் மருதுபாண்டி தாக்கினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாளை போலீசார் மருதுபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் மீது ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை மாநகர கமிஷனர் மூர்த்தி உத்தரவிட்டார். இதனையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் மருதுபாண்டியை அடைப்பதற்கான உத்தரவு நகலை பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் பாளை. மத்திய சிறையில் வழங்கினார்.

The post பாஜ நிர்வாகி மீது பாய்ந்தது குண்டர் சட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Nellai ,Marutubandi ,Thimmarajapuram ,Palayangottai ,Nellai district ,Subramanian ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...